நம்பிக்கை என்பது நாம் விழித்து கொண்டு காணும் கனவு - அரிஸ்டாட்டில்
17 வயது மாணவியின் கனவு: நான் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்தை பிடிக்க சென்றேன். பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில், நான் என் நெருங்கிய தோழியை கண்டேன். அவள் ஒரு மரத்தின் அடியில் சுடப்பட்டு இறந்து கிடந்தாள். நான் கொஞ்ச தூரம் சென்ற பின் இன்னொரு தோழனை கண்டேன். அங்கே அவன் மட்டும்தான் இருந்தான். நான் அவனை அழைத்துக் கொண்டு இறந்து கிடந்த நெருங்கிய தோழியை காண்பித்தேன். நாங்கள் அங்குமிங்கும் ஆட்களை தேடினோம். நாங்கள் நிறைய பேரை கண்டுபிடித்தோம்