Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Saturday, November 27, 2010

சமகால கல்வி - Survival of the fittest

சமகால கல்வி முறை எப்படி இருக்கிறது என்பது பற்றி எழுத சொன்ன தேவா அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்கள், கேள்விப்படும் கருத்துக்கள் இவற்றிலிருந்தே தங்கள் முடிவுகள், தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அப்படி பார்த்தால் என் அனுபவங்களிலிருந்து சமகால கல்வி முறை சரியில்லை என்றே சொல்லலாம்.

சிறுவர்களின் மூளை களிமண் போன்றது அதை நாம் முறையாக கையாண்டால் எளிதாக நல்லவற்றை பதிய வைக்கலாம். ஆனால் பலமுறை பெற்றோர்களும், ஆசிரியர்களுமே, மற்றவர்களுமே சிறுவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ தவறான வழிகாட்டிகளாகிவிடுகிறோம். கல்வி என்பது ஒரு மனிதனை உருவாக்கும், பண்படுத்தும் ஒன்று. அது முறையாக கிடைக்காத போது மனிதனும் முழுமையற்ற சீரற்றவனாகிறான்.