Wednesday, July 7, 2010

கடைசி வாய்ப்பு - 01 - எஸ்.கே

அவன் எழுந்து நின்றான்...


இனிமேல் தாமதித்து பயனில்லை...


அவளா நானா... யாராவது ஒருவர் இறக்க வேண்டும்... அது அவளாக இருக்கட்டும்...


அவளை எப்படிக் கொல்வது?


யோசிக்க ஆரம்பித்தான்......


கடைசி வாய்ப்பு - 01

ஜான் மணலில் நடந்துகொண்டிருந்தான்...

இரண்டாம் முறையாக அவளை கொல்ல முடியவில்லை என்ன ஒரு அவமானம்,.. இந்த கொலையைக் கூட செய்ய முடியாவிடாத நான் தலைவன் பதவிக்கு ஆசைப்படலாமா?

திடீரென இரண்டு பேர் அவருகே வந்து நின்றனர்.

”எங்கள் கூட வா”
”முடியாது வேணு கிட்ட போ சொல்” என்றான் அவன்.
”ஹிஹி ரொம்ப தைரியம் உனக்கு” ”இப்ப எங்க கூட வரலன்னா துப்பாக்கி பதில் சொல்லும்”
அவன் அமைதியாக அவர்களுடன் நடந்தான்.

---------- x ------- x ------
வேணு கம்பீரமாக உட்கார்ந்திருந்தான்.

”வா ஜான்”
”உன் வரவேற்பொன்றும் தேவையில்லை”
“நானும் உன்னை சந்தோசமாக வரவேற்கவில்லை”
ஜான் முகத்தில் பயங்கரமான கோபம் இருந்தது.

”உன் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டும். நீ நேற்று முளைத்த காளான்”
சிரித்தான் வேணு, ”நான் நேற்று முளைத்த காளானாய் இருக்கலாம். ஆனால் நீ வாய்ப்பை தவற விட்டவன்”
”ஜான் வாழ்க்கையில் வாய்ப்பு கதவை தட்டும்போது அதை பயன்படுத்திக்காதவன் முட்டாள். நீ ஒரு முட்டாள்.”

”வேணு” கத்தினான் ஜான்.
”ஷ். அமைதியா இரு. இங்கே நான் உன்னை கூப்பிட்டது எதுக்குன்னு உனக்கே தெரியும்”
”நீ இரண்டாவது முறையும் கோட்டை விட்டுட்ட. இனி உனக்கு வாய்ப்புகளே இல்லை தோற்றவர்களுக்கு இப்பூமியில் இடமில்லை.”

”வேணு விளையாடாடதே. தலைவர் இருந்திருந்தா நீ இப்படி பேசமாட்டே.”
:”அட! தலைவர் இறந்ததே உன்னாலதானேப்பா!”
”நீ நன்றி மறந்தவன். நீ இந்த இடத்துக்கு இந்த கூட்டத்துக்கு வருவதற்கே நான்தான் காரணம்.”

”இருக்கலாம். ஆனால் இப்போ நீ இங்கே குற்றவாளி. உனக்காக நான் இன்னும் ஒரு வாய்ப்பை தரேன். ஆனால் இதை நீ தவற விட்டேனா, ஒண்ணு நீயா செத்துடனும் இல்ல என் கையால சாக வேண்டியிருக்கும்.”

”ஜான்.. இது நீ இந்த கூட்டத்தில இருக்க மட்டுமில்ல நீ வாழறதுக்கே கடைசி வாய்ப்பு.”

- தொடரும்...

6 comments:

  1. is it a story??? is it going to continue??

    ReplyDelete
  2. அன்பின் சுரேஷ்

    தொடர் கதை நன்கு ஆரம்பிக்கப்பட்டு நன்கு செல்கிறது. தொடர்க

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  3. கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete